பெற்றோலால் லீற்றருக்கு 120 ரூபா பெற்றுக்கொள்ளும் அநுர! சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
ஒவ்வொரு பெற்றோல் லீற்றரிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 120 ரூபா பெற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு டீசல் லீற்றரிலும் பிரதமர் ஹரினி அமரசூரிய 90 ரூபா பெற்றுக்கொள்வதாக மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த தொகையில் ஒரு பகுதியை மக்களுக்கு வழங்குமாறு கோருவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு முடியாது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
அநுரகுமார திசாநாயக்க
மேலும், எமது ஆட்சியில் லீற்றர் ஒன்று 95 ரூபா செலுத்தியவர்கள் தற்பொழுது 280 ரூபாவிற்கு டீசல் விற்பனை செய்து கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை ஸ்திரதப்படுத்தியது தாங்களே என அவர்கள் கூறுகின்றார்கள்.
தேர்தல் மேடைகளில் அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஹரினி அமரசூரிய சத்தியம் செய்தது போன்று செய்திருந்தால் இன்று வரிசை யுகம் உருவாகியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆட்சியாளர்களும் ரணில் விக்ரமசிங்க செய்ததையே செய்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெட்டிப் பேச்சு பேசுவோரினால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 2 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
