ஜனாதிபதித் தேர்தல் குறித்து சமல் ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற அமைச்சர் சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர் மகிந்த ராஜபக்ச என்பதோடு அவர் இந்த நாட்டில் பல அபிவிருத்திப் பணிகளைச் செய்துள்ளார்.
எனவே, மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியக்குமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
