பொதுமக்களுக்கு இலங்கை மின்சார சபை விடுத்துள்ள வேண்டுகோள்
மின் பாவனையாளர்களிடம் இ - மின் கட்டண சேவைக்கு பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவித்தலில் இதனை தெரிவித்துள்ளது.
அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே இச்சேவையின் முதன்மையான நோக்கமாகும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இணையத்தளத்தின் ஊடாக பதிவு
அறிவிப்பில் மேலும் குறிப்பிடுகையில், இ - மின் கட்டண சேவையை பெற்றுக்கொள்ள ebill.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும்.
இல்லாவிடின், 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலமும் சேவையில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு, 1987 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் EBILL
எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு சேவையை வழங்குவதே இலக்கு என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.