மன்னாரில் கல்விக்கூடம் ஒன்றிற்கான அடிக்கல் நாட்டுவிழா
மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரிவின் இலுப்பைக்கடவை பகுதியில் மாவட்ட அரச அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் தனியார் கல்விக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றுள்ளது.
குறித்த கல்விக்கூடமானது கடந்த சில வருடங்களாக மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனுக்காக பல தொடர்ச்சியான கல்விசார் உதவிச் செயற்பாடுகளை மன்னார் இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலயத்துடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது.
மாலைநேரக் கல்வி வசதி
அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாகவே முற்றும் இலவசமாக மாணவர்களுக்கான மாலைநேரக் கல்வி வசதியுடன் ஆளுமை மற்றும் திறன் விருத்திசார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேச செயலர், மன்னார் மடுவலய கல்விப்பணிப்பாளர் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கிராமமட்ட அமைப்புகள் சார்பானவர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள்,
கிராம மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை
குறிப்பிடத்தக்கது.