நிறைவுக்கு வந்த மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களின் போராட்டம்
மத்திய மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்கள் நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்த தொடர் போராட்டமானது வெற்றியடைந்துள்ளது.
குறித்த போராட்டமானது, நேற்றைய தினம் நிறைவுக்கு வந்துள்ளது.
மத்திய மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 136 பேர், தங்களை ஆசிரியர் சேவையில் உள்ளீர்க்குமாறு கோரி நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்திருந்தனர்.
ஆசிரியர்களாக நியமனம்
அண்மையில் ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக அவர்கள் போராட்டம் நடத்திய வேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆளுநர் கவனத்திற்கு விடயத்தை எடுத்துச் சென்றிருந்ததுடன், ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், இதுவரை காலமும் ஆசிரிய உதவியாளர்களாக செயற்பட்ட 136 பேருக்கு மத்திய மாகாண ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
