தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தொடர்பில் அமெரிக்கா வழங்கிய தகவல்! கம்மன்பில பகிரங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி போரின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் உளவு பிரிவான CIA (Central Intelligence Agency) வழங்கிய உதவியே தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைய காரணம் என முன்னாள் அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இணைத்தளம் ஒன்றுக்கு பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா இறுதி போர் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு எதிர்கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மிதக்கும் ஆயுதக் களஞ்சியம்
ஈழப் போரின் இறுதி தருவாயின் ஆரம்பத்தில் வெளிநாடுகள் போருக்கு உதவி செய்தன.ஏனென்றால் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கான தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என நினைத்தனர்.

அதன் பின்னர் அவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவார்கள் என நம்பினர். இந்தோநேசியாவுக்கு அருகிலுள்ள கடற் பரப்பில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான மூன்று மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பில் CIA (Central Intelligence Agency) இலங்கைக்கு தகவல் வழங்கியது.
அதை அழித்த பின்னரே விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகம் நிறுத்தப்பட்டது. அதுவே தோல்விக்கு வழிவகுத்தது என நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.