சுமந்திரனின் கைகளில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் முடிவு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran), தான் தேர்தலில் தோல்வியடைந்தால் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்சியின் மத்திய குழு மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு தான் கட்டுப்படுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், தமிழரசுக் கட்சியினுடைய மத்திய குழுவானது சுமந்திரனுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மத்திய குழுவில் சுமந்திரன் ஆதரவை கூட்டி அதன் மூலம் தேசியப்பட்டியலுக்கு தெரிவாகும் சிறுபிள்ளைத்தனமான செயற்பாட்டை அவர் மேற்கொள்ள மாட்டார்.
குறிப்பாக, சுமந்திரன் எப்பொழுதும் தான் கொடுத்த வாக்குறுதியில் இருந்தும் விலக மாட்டார் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் - கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன அணியாக போட்டியிட்ட தலைமை வேட்பாளருமான கே.வி.தவராசா (K.V.Thavarasa) குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்.....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தனுஷ் இல்லை, அசுரன் படத்தில் நான் நடித்திருக்கனும், விட்டுக்கொடுத்துட்டேன்.. சொன்னது யார் பாருங்க Cineulagam
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri