இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்! விசாரணைக்கு காலம் நிர்ணயிப்பு
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அண்மைய சம்பள அதிகரிப்பு தொடர்பில் விசாரணை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (01) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு அழைக்க தீர்மானம்
இதன்படி, மார்ச் 05 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை விசாரணைக்காக அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
70 வீதமாக மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் மட்டத்தில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
