இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்! விசாரணைக்கு காலம் நிர்ணயிப்பு
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அண்மைய சம்பள அதிகரிப்பு தொடர்பில் விசாரணை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (01) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு அழைக்க தீர்மானம்
இதன்படி, மார்ச் 05 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை விசாரணைக்காக அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
70 வீதமாக மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் மட்டத்தில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
