திரைமறைவில் செயற்படும் மத்திய வங்கியின் ஊழியர்கள்: இலட்சங்களில் அதிகரிக்கப்படும் சம்பளம்
நாட்டை வங்குரோத்து செய்த மத்திய வங்கி அதிகாரிகளுக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊழியர்களைக் குறைக்குமாறு அறிவுறுத்தும் மக்களின் நடத்தை நியாயமானதா எனவும் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய வங்கியின் சுதந்திரம்
மத்திய வங்கியின் பிரதி ஆளுநரின் சம்பளம் ஏழு இலட்சத்து பன்னிரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய வங்கியின் அலுவலக உதவியாளர் ஒருவரின் சம்பளம் 75000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மத்திய வங்கியின் ஊழியர்கள் திரைமறைவில் செயற்பட்டு வருவதாகவும், இந்த சட்டவிரோத கொடுப்பனவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மத்திய வங்கியின் சுதந்திரம் என்பது நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதை அர்த்தப்படுத்துவதில்லை எனவும், சம்பளத்தை அதிகரிப்பதற்கு அனுமதியிருந்தாலும் நாடாளுமன்றத்தின் அனுமதியும் தேவை எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி News Lankasri

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
