இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
மார்ச் 15ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைச்சேரி உண்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் அறிவிப்பில் மேலும்,
இதன்படி, 91 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட 50 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்களும்,
182 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்களும்,
364 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்களும் ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.