தொழில் செய்யும் அனைவரின் சம்பளம் குறித்து இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை
மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால் தொழில் செய்யும் அனைவரின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும் என சுற்றாடல் துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(21) உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தி கொடுக்கவில்லை.
மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானது.
நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கவில்லை.தன்னிச்சையான முறையில் வங்குரோத்து நிலையை அறிவித்தார்.

புதிய வங்கி சட்டம்
மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக 'புதிய வங்கி சட்டம் ' இயற்றப்படவில்லை. நாட்டின் நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு என்பதை அவர் கவனத்திற் கொள்ளவில்லை.
மத்திய வங்கி ஆளுநரின் தவறான தீர்மானத்தால் நாடு என்ற ரீதியில் மீண்டெழ முடியாமல் உள்ளது. நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற போது மத்திய வங்கியின் ஆளுநர் நகைப்புக்குரிய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்.
ஆகவே மத்திய வங்கியின் சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால் தொழில் செய்யும் அனைவரின் சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
84 நாட்கள் பிக்பாஸ் 9 வீட்டில் விளையாடியதற்காக கனி வாங்கிய சம்பளம்... எத்தனை லட்சம் தெரியுமா? Cineulagam