இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து உண்டியல் மூலம் அனுப்பப்படும் பணம் தொடர்பில் வெளியான தகவல்
வெளிநாடுகளில் இலங்கையர்கள் உழைக்கும் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு உண்டியல் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் நபர்கள் 240 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையான விலையை வழங்குவதாக தெரியவருகிறது.
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களிடம் அந்நாடுகளில் உள்ள பிரதிநிதிகள் டொலர்களை பெற்றுக்கொள்வதுடன் அவர்களின் இலங்கை பிரதிநிதிகள், இலங்கையில் உள்ள குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு ஒரு டொலருக்கு 240 முதல் 250 ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை செலுத்தி வருகின்றனர்.
உண்டியல் ஊடாக அனுப்பி வைக்கப்படும் டொலர்கள் இலங்கை அரசின் கருவூலத்திற்கு கிடைப்பதில்லை. அவற்றை அந்நாடுகளில் பிரதிநிதிகள் வைத்துக்கொள்கின்றனர்.
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள், இலங்கைக்கு அனுப்பி வைக்கும் டொலர்களுக்கு தலா 210 ரூபாய் வீதம் செலுத்துவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
எனினும் வெளிநாடுகளில் இருந்து டொலர்களை அனுப்பி வைப்பதற்கான உரிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலைமையில், தமது நேரம் மற்றும் வலுவை செலவிட்டு, இலங்கையின் வங்கி அல்லது நிறுவனத்தை தேடி நீண்ட தூரம் செல்வதை விட இவ்வாறு சட்டவிரோதமான முறையில் பணத்தை அனுப்புவது இலகுவானது என்பதுடன் இலாபகரமானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam