சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பொங்கல் பண்டிகையை கொண்டாடுங்கள்! - நாட்டு மக்களிடம் கோரிக்கை
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார தரப்பினரால் இந்து பக்தர்களிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளை கருத்திற் கொண்டு வீடுகளிலேயே குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் மட்டும் தைப்பொங்கல் கொண்டாட்டங்களை வரையறுத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் கோரியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான பின்னணியில் தைப்பொங்கல் பண்டிகையை சுகாதார வழிகாட்டல்களுடன் பின்பற்றுமாறு இந்து மதத் தலைவர்களும் கோரியுள்ளனர்.
இதேவேளை, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மூலம் 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கோவிட் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சாத்தியம் 90 வீதத்தினால் குறைகின்றது ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவ்கே தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
