இலங்கை மின்சார சபையின் புதிய தீர்மானம்
இலங்கை மின்சார சபையின் (CEB) பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் 2022 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவினை கைவிடுவதற்கு இணங்கியுள்ளன.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்புரையின் பேரில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நட்டத்தில் இயங்கும் மின்சாரசபை
இத்தீர்மானத்தினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பாராட்டியுள்ளது.

இது இலங்கை மின்சார சபையின் தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் பில்லியன் கணக்கான ரூபாயைச் சேமிக்க உதவும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சார நெருக்கடி
இலங்கையில் தற்போது நிலவும் மின்சார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை மின்சார சபை உள்ளதுடன், நட்டத்தை ஏற்படுத்தும் அரச நிறுவனமாக கருதப்படுகிறது.

மின்சாரக் கட்டண உயர்வு முன்மொழிவு உட்பட, மின்சார சபையின் நஷ்டத்தை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri