மன்னார் பூநகரி பகுதிகளை இலக்கு வைத்த அதானி! இலங்கையில் அதானி குழுமத்தின் திட்ட விஸ்தரிப்புக்கள்
அதானியும் இலங்கையும்
இந்தியாவின் அதானி குழுமம், மன்னார் மற்றும் பூநகரியில் மொத்தம் 500 மெகாவாட் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது மாத்திரமல்லாமல் பின்னர், இலங்கையில் தமது திட்டங்களை மேலும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாக ஆவணங்கள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு நவம்பரில் அதானி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வீநீட் ஜெய்ன், இலங்கை திறைசேரியின் முன்னாள் செயலாளர் ஏ. ஆர் ஆட்டகலவுக்கு எழுதிய கடிதத்தில், இலங்கையின் எரிசக்தி தேவைக்கு ஏற்ப, 1000 மெகாவோட் திட்டங்களை அமைக்கவும் தமது நிறுவனம் தயார் என்று அறிவித்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் முதலீடு
ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில், வெஸ்ட் கென்டெய்னர் இன்டர்நேஷனல் டெர்மினல் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை அதானி போர்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே கொண்டுள்ளது.
மன்னார் மற்றும் பூநகரியில் 150 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் 100 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்திற்கு 442 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மன்னாரில் 330 ஹெக்டேயரில் 250 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் இந்த திட்டங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவருக்கு அறிவுறுத்தியதாக ஆவணங்கள் காட்டுகின்றன.
பெர்டினாண்டோவும் கோட்டாபயவும்
கடந்த வருடம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி திறைசேரியின் முன்னாள் செயலாளர் ஆட்டிகலவுக்கு, மின்சார சபையின் முன்னாள் தலைவர் பெர்டினாண்டோ எழுதிய கடிதத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் தலைவர் பெர்டினாண்டோ ஜூன் 13 அன்று, கோப் என்ற பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழுவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 நவம்பரில் தன்னை வரவழைத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதானி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தம்மை கோருவதாக தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை கோட்டாபய ராஜபக்ச, மறுத்திருந்த நிலையில், பெர்டினாண்டோ, உடனடியாகவே பதவி விலகிவேண்டிய நிலை ஏற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

இந்திய வம்சாவளி சிறுவனுக்கு லண்டனில் நண்பர்கள் அளித்த இறுதி மரியாதை: நெஞ்சை உலுக்கும் புகைப்படம் News Lankasri
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022