இலங்கை மின்சாரசபை தலைவரின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை!
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பேர்டிணான்டோவின் பதவி விலகலை, உரிய அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நடைமுறை மின்சார நெருக்கடிக்கு மத்தியில், நேற்று முன்தினம், மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டிணான்டோ தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
அவரின் பதவி விலகல் கடிதம், ஜனாதிபதி்க்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே அமரிக்காவின் நியூ போர்ட்ரீஸ் எனர்ஜி, நிறுவனத்துடன், உடன்படிக்கையை செய்து கொண்டமை தொடர்பில் பேர்டிணான்டோ மீது, மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
எனினும் பேர்டிணான்டோ, தமது பதவி விலகல் கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் பதவி விலகுவதாக தெரிவித்திருந்தார்.
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam