பல இடங்களில் திட்டமிட்ட மின்சார தடை? பொலிஸில் முறைப்பாடு
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ, 29ம் திகதி, டிரான்ஸ்மிஷன் லைனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது ஒரு நாசகார செயலா என்பதை நிரூபிப்பதற்காக நடந்துகொண்டிருக்கும் விசாரணையின் போதே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின்சார சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பலர் இந்த செயலிழப்பு குறித்து கவலை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை ஊழியர்களால் இந்த செயலிழப்பு ஏற்பட்டதாக சிலர் தன்னிடம் முறைப்பாடு தெரிவிப்பதாகவும், மற்றவர்கள் இது சாதாரண செயலிழப்பு இல்லை என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri