பல இடங்களில் திட்டமிட்ட மின்சார தடை? பொலிஸில் முறைப்பாடு
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ, 29ம் திகதி, டிரான்ஸ்மிஷன் லைனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது ஒரு நாசகார செயலா என்பதை நிரூபிப்பதற்காக நடந்துகொண்டிருக்கும் விசாரணையின் போதே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின்சார சபைக்கு உள்ளேயும் வெளியேயும் பலர் இந்த செயலிழப்பு குறித்து கவலை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை ஊழியர்களால் இந்த செயலிழப்பு ஏற்பட்டதாக சிலர் தன்னிடம் முறைப்பாடு தெரிவிப்பதாகவும், மற்றவர்கள் இது சாதாரண செயலிழப்பு இல்லை என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri