இந்த ஆண்டில் மின்சார கட்டணங்கள் 84% அதிகரிப்பு
கடந்த எட்டு மாத காலப்பகுதியில் இலங்கையில் மின்சார கட்டணம் 84 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது தடவையாக நேற்றைய தினம் மின்சார கட்டணத்தை 18 வீதத்தினால் உயர்த்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது
இதன்படி மொத்தமாக இந்த ஆண்டில் மூன்று தடவைகள் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையின் ஒரு பகுதியை கொடுத்திருந்தால்..! இன்றைய நிலையை விபரிக்கும் ராஜித
மின்சார கட்டணம் உயர்வு
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி 66.2 வீதத்தினால் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதுடன் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி மின்சார கட்டணம் 14 .12 வீதத்தினால் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

பின்னர் நேற்றைய தினம் மேலும் 18 வீதத்தினால் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது.
இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்யும் நோக்கில் இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சார சட்டத்தின் அடிப்படையில் ஆண்டு ஒன்றுக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் மின்சார கட்டணத்தை உயர்த்த முடியாது என்ற போதிலும் விசேட தேவை ஒன்றுக்காக மூன்றாவது தடவையாகவும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam