காலக்கெடுவிற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு உடனடியாக நடைமுறைக்கு வந்த போர் நிறுத்தம்! தடுக்கப்பட்ட மாபெரும் தாக்குதல்
பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், போர் நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மிகுந்த பணிவுடன் நான் ஒன்றை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று அதனை குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தம்
ஈரான் இஸ்லாமியக் குடியரசும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும், அவற்றின் கூட்டாளிகளுடன் இணைந்து, லெபனான் மற்றும் பிற இடங்கள் உட்பட எல்லா இடங்களிலும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த நடவடிக்கையை அவர் வரவேற்பதோடு, "அனைத்து சர்ச்சைகளையும் தீர்ப்பதற்கான ஒரு உறுதியான உடன்படிக்கையை எட்டுவதற்கு மேலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக", தூதுக்குழுக்களை ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்திற்கு அழைப்பு விடுக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு கிழக்கு பகல் நேரப்படி இரவு 8:00 மணி (பிரிட்டிஷ் கோடை நேரப்படி அதிகாலை 1:00 மணி) வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தார்.
மேலும், அவ்வாறு ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் நாடு தழுவிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் அச்சுறுத்தியிருந்தார்.
போர் நிறுத்தம் காலாவதியாவதற்கு வெறும் பத்து நிமிடங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், போர் நிறுத்தம் "உடனடியாக நடைமுறை" என்று அறிவித்தார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் தற்கொலைக்கு காரணம் என்ன?... வெளிவந்த தகவல் Cineulagam