இராஜாங்க அமைச்சர் வீட்டின் சீ.சீ.டி.வி கமராக்கள் அரச பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் அவரது மெய்பாதுகாவலர் பொது மகன் ஒருவரை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக அமைச்சரின் வீட்டில் பொருத்தப்பட்ட சீ.சீ.ரி.வி கமரா, டி. வி. ஆர் காட்டிஸ் (வண்தட்டு) என்பன மொரட்டுவ அரச இரசாயனவியல் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 21 ம் திகதி மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இதன்போது சம்பவத்தில் மகாலிங்கம் பாலேந்திரன் என்பவர் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவத்தின் முக்கிய தடைய பொருளாக அமைச்சரின் வீட்டில் பொருத்தப்பட்ட சீ.சீ.ரி .வி கமராவின் டி.வி.ஆர் காட்டிஸ் (வண்தட்டு) சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் ஒரு மாதகாலத்திற்கு மேலாக பழுதடைந்து கழற்றப்பட்டு திருத்த கொடுக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த சீ.சீ.ரி .வி கமராவின் பாகமான டி.வி.ஆர் காட்டிஸ் (வண்தட்டு) பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ,இதனை மொறட்டுவையில் உள்ள களணி மற்றும் இலத்திரணியல் தொடர்பான அரச இரசாயனவியல் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பரிசோதனைக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டு அதனை பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்,
இந்த சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக வும் அவர் தெரிவித்துள்ளார்.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
