ரணிலின் லண்டன் பயண செலவு தொடர்பான வழக்கு! அரசியல் தேவை கருதி நடத்தப்படுகிறது என குற்றச்சாட்டு

London Ranil Wickremesinghe Law and Order
By Shadhu Shanker Apr 22, 2026 03:53 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணத்தின்போது அவரின் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட பணம் தொடர்பில் தற்போது இடம்பெறும் வழக்கு விசாரணை யாருடையதாவது அரசியல் தேவைக்காக இடம்பெறுகின்றதாகவே எமக்கு காணக்கூடியதாக இருக்கிறது என சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசில் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு கட்டாயம் நீதி வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வலியுறுத்து

ஈஸ்டர் தாக்குதலுக்கு கட்டாயம் நீதி வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வலியுறுத்து

நாட்டுக்கு பாரிய சேவை

மேலும் தெரிவித்த அவர்,

நாட்டில் சுயாதீனமாக தீர்மானங்களை எடுத்துவந்த நிறுவனங்களுக்கு தற்போது அவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதற்கான இயலுமை இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

நாட்டின் சட்டமா அதிபர் என்பவர் நீதியின் ஊற்றுக்கண்ணாகும். அவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு எதிராக யாருக்கும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது.

ரணிலின் லண்டன் பயண செலவு தொடர்பான வழக்கு! அரசியல் தேவை கருதி நடத்தப்படுகிறது என குற்றச்சாட்டு | Case Regarding Ranil S London Travel Expenses

அவர் தீர்மானங்களை சுயாதீனமாக எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் சட்டமா அதிபரை அந்த பதவியில் இருந்து நீக்கப்போவதாக பல்வேறு போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. என்றாலும் சட்டத்தரணிகள் அவருடன் நின்றமையால் அந்த பிரசாரம் மறைந்துவிட்டது.

எமது நாட்டின் நீதிமன்ற நடவடிக்கைகள் நாங்கள் அனைவரும் திருப்தியடையும் வகையில் செயற்பட்டுவருவதை காணக்கூடியதாக இருக்கிறது.

நூறுவருடங்களுக்கும் அதிக பழமை வாய்ந்த இந்த நிறுவனங்கள் தற்காலத்தில் அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் காரணமாக வீழ்ச்சியடைந்து செல்லும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. உண்மையில் ரணில் விக்ரமசிங்க, இந்த நாட்டுக்கு பாரிய சேவையை செய்த ஒருவர். அது யாரும் அறிந்த விடயம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன் வெளியான காணொளி: மறைக்கப்படும் உண்மை - சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன் வெளியான காணொளி: மறைக்கப்படும் உண்மை - சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை

லண்டன் பயணம்

அவர் ஜனாதிபதியாக இருக்கும்போது மேற்கொண்ட பயணம் தொடர்பிலே தற்போது சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. அவர் லண்டன் ஊடாகவே அந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இங்கிலாந்தை பொறுத்தவரை விடுதலை புலிகளுக்கு ஆதரவானவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு இருக்கிறார்கள்.

தற்போது விடுதலை புலிகள் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் குறைந்திருந்தாலும் அவர்களின் அச்சுறுத்தல் எந்தநேரம், எவ்வாறு அச்சுறுத்தலாக அமையும் என எங்களுக்கு தெரிவிக்க முடியாது.

ரணிலின் லண்டன் பயண செலவு தொடர்பான வழக்கு! அரசியல் தேவை கருதி நடத்தப்படுகிறது என குற்றச்சாட்டு | Case Regarding Ranil S London Travel Expenses

அதனால் இது தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு தரப்பினராலே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் தலைவரின் பாதுகாப்பு என்பது நாட்டின் பாதுகாப்பாகும். அவர் பாதுகாப்பு தொடர்பில் விருப்பம் இல்லாவிட்டாலும் அரசாங்கம் என்றவகையில் அவருக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக முறைகேடாக 16 மில்லியன் ரூபா செலவழித்துள்ளதாக தெரிவித்தே தற்போது வழக்கு விசாரணை இடம்பெறுகிறது. ஆனால் 2022ஆம் ஆண்டு இதேபோன்றதொரு சம்பவத்துக்கு பிரதம நீதியரசர் உள்ளிட் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 5பேர் கொண்ட குழு வழங்கிய வழக்கு தீர்ப்பொன்று இருக்கிறது.

அதாவது, அப்போது இருந்த ஆட்சியாளர்கள் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வரி அறவிடுவதை தடுக்கும்வகையில் சட்ட திருத்தம் மேற்கொண்டதால், நாட்டுக்கு 650 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டடுள்ளதாக தெரிவித்து, தாமெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 5பேர் கொண்ட குழு ஆட்சியாளர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருந்தது.

நிலக்கரி விவகாரம் குறித்த கணக்காய்வாளர் அறிக்கை தவறானது - அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிக்கும் குற்றச்சாட்டு

நிலக்கரி விவகாரம் குறித்த கணக்காய்வாளர் அறிக்கை தவறானது - அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவிக்கும் குற்றச்சாட்டு

 லஞ்ச ஊழல் விசாரணை

அதேநேரம் அந்த காலப்பகுதியில் இது தொடர்பில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரை அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் நாட்டின் தலைவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தீமானம் எடுக்கும்போது, அது சட்டமா அதிபர் திணைக்களத்தினாலோ அல்லது குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்தினாலோ எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய இடம்பெறும் என நாங்கள் ஒருபோதும் நம்புவதில்லை.

ரணிலின் லண்டன் பயண செலவு தொடர்பான வழக்கு! அரசியல் தேவை கருதி நடத்தப்படுகிறது என குற்றச்சாட்டு | Case Regarding Ranil S London Travel Expenses

அதனால் இந்த விடயங்கள் யாருடையதாவது அரசியல் தேவைக்காக இடம்பெறுகின்றதாகவே எமக்கு காணக்கூடியதாக இருக்கிறது.

அதனால் சட்டத்தை நிலைநாட்டக்கூடிய நிறுவனங்கள் அதன் சுயாதீனத்தன்மையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அதனை பாதுகாத்துக்கொள்வதற்காக கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கோள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US