யாழில் தெருவோர வியாபாரிகள் மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
யாழ்ப்பாணம் (Jaffna) திருநெல்வேலியில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, தெருவோர வியாபாரிகள் மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் நேற்றையதினம் (10.06.2024) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை மற்றும் தனிநபர் சுகாதாரம் இன்றி உணவை கையாண்டமை போன்ற அடிப்படையான சுகாதார வசதிகள் கூட இல்லாமல் இயங்கியமை மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடுமையான எச்சரிக்கை
வழக்குகளை நேற்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் செ. லெனின்குமார் மூவரிற்கும் மொத்தமாக 35,000/= தண்டம் அறவிட்டதுடன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


ஒன்றாக சுற்றுலா சென்றுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri