ஞானசாரரை விடுவிக்கும் முடிவு: மைத்திரிபாலவுக்கு எதிரான வழக்கு தாக்கல்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை மன்னித்து விடுதலை செய்ய அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
குறித்த விடுவிப்பு தொடர்பில் இன்று(29.05.2025) உயர் நீதிமன்றத்திற்கு அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை இரத்து செய்யக் கோரி, மாற்றுக் கொள்கை மையமும், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவும் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஞானசார தேரர்
சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ராஜித பெரேரா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த மனுக்கள் அனைத்தும் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் ராஜித பெரேரா அழைக்கப்பட்டார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான தொடர்புடைய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பாக முன்னிலையாக ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு, தொடர்புடைய மனுவை ஒகஸ்ட் 26 ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மேல்முறையீட்டில் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளில் தண்டனையை அனுபவிக்க உத்தரவிடப்பட்டதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இந்த தண்டனையை உயர் நீதிமன்றமும் உறுதி செய்ததாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.
எனினும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடிவு செய்ததாகவும், அத்தகைய மன்னிப்பு வழங்கியதில், முன்னாள் ஜனாதிபதி அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட நடைமுறையைப் பின்பற்றவில்லை என்றும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்கள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும், சம்பந்தப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை செல்லாததாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam
