மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கில் சட்டமா அதிபர் ஆலோசனை பெற தீர்மானம்
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு(Mahindananda Aluthgamage) எதிரான ஊழல் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைக் காரியாலயங்களுக்கு கரம் மற்றும் டாம் விளையாட்டுக்கான பலகைகளை வழங்கியிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
அதற்காக அவர் அரசாங்க நிதியில் இருந்து 39 மில்லியன் ரூபாவை மோசடியாகப் பயன்படுத்தியிருந்தார்.

இது தொடர்பான விசாரணையின் பின்னர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் அப்போதைய சதொச நிறுவனத் தலைவர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்திருந்தது.
குறித்த வழக்கில் சட்ட மா அதிபர் ஆலோசனையைப் பெறுவதற்காக எதிர்வரும் ஒக்டோபர் 29ம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam