சபாநாயகருக்கு எதிராக சஜித் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் (ஐ.பி.யு) முறைப்பாடு அளிக்க எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பிற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த சபாநாயகர் நியாயமான நேரத்தை வழங்கவில்லை என தெரிவித்து இந்த முநைப்பாடு அளிக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சியின் தலைமை அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க கேள்வி எழுப்பியபோது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அவசர விடயத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க நாட்டிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
சபாநாயகரின் நடவடிக்கை
எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோ உரையாடுவதை முந்தைய எந்த சபாநாயகரும் தடுத்ததில்லை என்று கயந்த கருணாதிலகா குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிக்கு இழைக்கப்படும் இந்த அநீதி குறித்து இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்திருந்தாலும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை, எனவே இந்த தடவை அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் புகார் அளிக்க முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறைப்பாட்டை சமர்ப்பிப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் விவாதித்ததாகவும், அனைவரின் ஒப்புதலையும் பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



