சுகாதார வழிகாட்டுதல்களை மீறிய 1400 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு!
சுகாதார வழிகாட்டுதல்களை மீறிமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காக 1,400 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோவிட் -19 பரவலை தொடர்ந்து சுகாதாரத் துறை, பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளில் பின்பற்ற வேண்டிய பல சுகாதார பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியது. கோவிட் -19 விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸார் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2020 அக்டோபர் 15ம் திகதி வெளியிடப்பட்ட அரசிதழின் விதிகளுக்கு இணங்க பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பராமரிப்பு குறித்து பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் கூட்டாக நடவடிக்கைகளை நடத்தியுள்ளன.
குறித்த வர்த்தமானி அறிவிப்பின்படி கோவிட் - 19 விதிமுறைகளை பின்பற்றத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
