இலங்கையை அச்சுறுத்தும் காற்று மாசு : அதிகரித்துள்ள அபாயம்
காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இருதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக இருதய நோய் நிபுணர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய காற்று மாசுபாடு நீண்ட காலமாக ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில் தற்போது மனித ஆரோக்கியத்தில் தற்போது தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், காற்று மாசுபாடு இதய நோயை உருவாக்கும் முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் இருதய நோய் நிபுணர் அனிது பத்திரன தெரிவித்துள்ளார்.
நோயாளர்கள் பாதிப்பு

இலங்கையில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால், காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய நோய்களைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாத செயற்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் காற்று மாசுபாடு இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமல்லாமல், உயர் குருதி அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் நீண்டகால நுரையீரல் பிரச்சினை கொண்ட நோயாளிகளையும் பாதிக்கும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri
