பண்டாரவளை பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பண்டாரவளை பகுதியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கார் ஒன்றே இன்று (14) காலை இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் 51மற்றும் 70 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 மற்றும் 53 வயதுடைய இருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை
இந்நிலையில் படுகாயமடைந்த இருவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவன் குணதிலக தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
