பண்டாரவளை பிரதான வீதியில் கோர விபத்து: இருவர் பலி
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பண்டாரவளை பகுதியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கார் ஒன்றே இன்று (14) காலை இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் 51மற்றும் 70 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 மற்றும் 53 வயதுடைய இருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை
இந்நிலையில் படுகாயமடைந்த இருவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹாலிஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ருவன் குணதிலக தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam