திருகோணமலையில் கார் விபத்து: குழந்தை உட்பட நான்கு பேர் காயம்
கந்தளாய்- அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள்ஊத்து பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று ( 21) மாலை சுமார் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அக்போபுர பொலிஸார் தெரிவிகின்றனர். ஹபறன பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று, கந்தளாய் – கித்துள்ஊத்து பகுதியில் வரும்போது விபத்துக்குள்ளானது.
விபத்து
பொலிஸ் விசாரணையில் தெரியவருவதாவது, காரின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் (நித்திரை மயக்கம்) காரணமாக, அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இரண்டு பெண்கள் ஒரு குழந்தை கார் சாரதி என நால்வரும் பலத்த காயமடைந்தனர்.
மேலதிக விசாரணை
காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து அக்போபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.