விஜயகாந்தின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி

Vijayakanth Tamil nadu
By Independent Writer Jan 03, 2024 07:13 PM GMT
Independent Writer

Independent Writer

in உலகம்
Report

மறைந்த புரட்சிக்கலைஞர் "கப்டன்" விஜயகாந்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையால் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 28 டிசம்பர் 2023 அன்று சுகயீனம் காரணமாக மறைந்த புரட்சிக்கலைஞர் "கப்டன்" விஜயகாந்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையால் அதன் தற்போதைய பொறுப்பாளர் வி.ஜெயாத்தன் கையொப்பமிட்ட இரங்கல் அறிக்கையானது, 03.01.2024 அன்று மாலை அவரது மனைவி, பிள்ளைகளிடம் கையளிக்கப்பட்டது.

தமிழகம் - சென்னையில் அவர்களது இல்லத்தில் வைத்து குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்: வெளியானது விசேட வர்த்தமானி

எரிபொருள் உள்ளிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்: வெளியானது விசேட வர்த்தமானி

தமிழீழ போராட்டத்திற்கு ஆதரவு

இந்நிகழ்வில் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் துணைவியார் பிரேமலதா, மகன்களான விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் பிரேமலதாவின் சகோதரர் சதீஷ் ஆகியோர் உட்பட தமிழீழ உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

விஜயகாந்தின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி | Captain Vijayakanth Ltte Obituary

இச்சந்திப்பின் நிறைவில் கடந்த காலங்களில் "புரட்சிக் கலைஞர்" எவ்வாறு தமிழீழ மக்களின் போராட்டத்திற்கும் அவர்களுடைய சுதந்திர வாழ்க்கைக்கும் துணை நின்றாரோ, அதேபோன்று எதிர்காலங்களிலும் தொடர்ந்து தேசிய திராவிட முற்போக்கு கழகம் செயற்படும் என்று அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா மிகவும் உணர்வு பூர்வமாகவும் உறுதியாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலிருந்து ஆதரவுக் குரல்

“எப்போதெல்லாம் நியாயப்பாடுகளுடன் கூடிய விடுதலைப் போராட்டங்கள் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்காக முழு உலகும் பாடுபடும். அது போல அவற்றுக்கான ஆதரவும் உலகம் முழுவதிலுமிருந்தும் கிடைக்கும்.

விஜயகாந்தின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி | Captain Vijayakanth Ltte Obituary

அவ்வாறுதான் தமிழீழ போராட்டத்திற்காக தமிழகத்திலிருந்து எழுகின்ற ஆதரவுக் குரல்களும், உதவிகளும் காலம் காலமாக வெவ்வேறு தலைவர்களாலும், மக்களாலும் தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கிற விடயமாகும்.

அவ்வாறு தமிழீழப் போராட்டத்திற்காக இதயசுத்தியுடன் பல ஆண்டுகளாக ஒலித்து வந்த குரல் விஜயகாந்த் அவர்களுடையதாகும்.

சிறந்த நடிகர், வெற்றிகரமான அரசியல் தலைவர், சிறந்த மனிதர், மிகச்சிறந்த ஆளுமைத்திறன் கொண்டவர் என்கிற பல் பரிமாணங்களைக் கொண்ட அவரின் இழப்பு அவரின் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் தமிழக, தமிழீழ மக்களுக்கும் பல்வேறு வழிகளில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

நடைமுறைக்கு வந்துள்ள வற் வரி திருத்தம் : இலங்கையில் திடீரென அதிகரித்த இறக்குமதிகள்

நடைமுறைக்கு வந்துள்ள வற் வரி திருத்தம் : இலங்கையில் திடீரென அதிகரித்த இறக்குமதிகள்

விஜயகாந்தின் மரணம் 

தனிப்பட்ட நலன்கள் மற்றும் தமது அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்பவர்கள் மத்தியில் விஜயகாந்த் தொடர்ச்சியாக தமிழீழ போராட்டத்திற்கான ஆதரவுக் குரலாக ஒலித்து வந்ததுடன் ஈழத் தமிழ் மக்கள் மேல் உண்மையான கரிசனை கொண்டிருந்தார்.

விஜயகாந்தின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி | Captain Vijayakanth Ltte Obituary

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஈழத்தில் நடைபெற்றது ‘இனவழிப்பு’ என்பதனை வெளிப்படையாக பேசியிருந்தார்.

தனித் தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்பு பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைக்கு உள்ளாகியபோதும் தமது தாயக விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் தமிழ் மக்களுக்கு விஜயகாந்தின் மரணம் ஈடுசெய்ய முடியாததாகும்” என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியப் படைவீரர்கள்! என்ன நடக்கின்றது இஸ்ரேலில்? (Video)

காசாவை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியப் படைவீரர்கள்! என்ன நடக்கின்றது இஸ்ரேலில்? (Video)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US