வடக்கு மாகாணத்தில் பொலிஸ் சுற்றிவளைப்பு: பெருமளவில் கைப்பற்றப்பட்ட கஞ்சா
வடக்கு மாகாணத்தில் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் கீழ் 36 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ். மாவட்ட (Jaffna) குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று (06.04.2024) அதிகாலை செம்மணி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 18 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர், இன்று அதிகாலை செம்மணி பகுதியில் வானொலி பெட்டியில் வைத்து 3 கிலோகிராம் கஞ்சாவினை கடத்த முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மன்னார் பேசாலை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை பதுக்கி வைத்திருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வானொலி பெட்டியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி பொன்னாறு பகுதியில் 18 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னாரில் உள்ள போதை ஒழிப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், சான்று பொருட்களும் கிளிநொச்சி பொலிஸ் காவவில் உள்ள நிலையில், இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி - தீபன், எரிமலை மற்றும் யது
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri