சுங்கப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புற்றுநோய் சிகிச்சை இயந்திரம் விடுவிப்பு
கொழும்புத்துறைமுகத்தில் சுங்கப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த புற்றுநோய் சிகிச்சைக்கான இயந்திரம் ஒன்று நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.
மஹரகமயில் அமைந்துள்ள அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்கான இயந்திரம் ஒன்று திருத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
எனினும் நீண்ட நாட்களாக அதனை சுங்கப்பிரிவினர் தடுத்து வைத்திருந்தனர்.
தனியார் நிறுவனத்தின் தாமதம்
இந்நிலையில், குறித்த இயந்திரம் புற்று நோய் வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்களில் ஒன்று என்பதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் எழுத்து மூலம் உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்னரே அந்த இயந்திரம் உடனடியாக விடுவிக்கப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உபகரணங்களை இறக்குமதி செய்த தனியார் நிறுவனத்தின் தாமதம் காரணமாகவே குறித்த இயந்திரம் நீண்ட நாட்களாக சுங்கப் பிரிவின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
