ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இரத்து! - வெளியானது அறிவிப்பு
எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகளை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 வைரஸ் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் தூர பிரதேச ரயில் சேவையினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
இந்நிலையிலேயே, ரயில் சேவைகளை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 15 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டை- பதுள்ளை, கொழும்பு கோட்டை -கண்டி- கொழும்பு கோட்டை,கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை- கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை - பொலனறுவை ஆகிய கடுகதி ரயில் சேவைகள் நாளைமறுதினம் தொடக்கம் சேவையில் ஈடுப்படடமாட்டாது.
அத்துடன் பதுளை - கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை -பதுள்ளை,பொலனறுவை- கொழும்பு கோட்டை, காங்கேசன்துறை - கொழும்பு கோட்டை,பதுள்ளை - கொழும்பு கோட்டை ஆகிய பிரதேசங்களுக்கான கடுகதி ரயில்கள் சனிக்கிழமை முதல் சேவையில் ஈடுப்படமாட்டாது.
காலை 8.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி புறப்படும் சிக்ரகாமி கடுகதி ரயில் எதிர்வரும் 8 , மற்றும் 14 ஆம் திகதிகளிலும், சேவையில் ஈடுப்படுத்தப்படும்.
அத்துடன் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் ரயில் எதிர்வரும்9 ஆம் மற்றும்15 ஆம் திகதிகளில் சேவையில் ஈடுப்படுத்தப்படும். தற்போது சேவையில் உள்ள அலுவலக ரயில் நேர அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.
அலுவலக ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுப்படும் பொது மக்கள் தேவையற்ற பயணங்களை முடிந்தளவிற்கு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ரயில் நிலையத்திற்குள்ளும், ரயிலுக்குள்ளும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பொது பயணிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
ரயில் நிலையத்தில் தேவையற்ற வகையில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளவும். ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள்