திருட்டு ஒப்பந்தத்தை ரத்துச் செய்! பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் மின்சாரம்,எண்ணெய் என்பனவற்றின் சுயாதிபத்திதுவத்தை காட்டிக்கொடுக்கும் திருட்டு ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமாறு குறிப்பிட்டு தொழிலாளர் மத்திய நிலையத்தினால் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு முன்னிலை சோசலிசக் கட்சியினாலும் அமெரிக்கா, சீனா,இந்திய மரணப்பொறியில் மக்களை சிக்கவைக்கும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராவோம் என்றும் எழுதப்பட்டுள்ள சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கந்தளாய், திருகோணமலை மற்றும் தம்பலகாமம் போன்ற பிரதேசங்களின் சந்திகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,சிங்கள மற்றும் தமிழ் பொழிகளிலும் அச்சிடப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
