வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவோருக்கு வெளியான தகவல்
வரவு மற்றும் கடனட்டைகள் மூலம் பணம் செலுத்தும் போது அறவிடப்படும் மேலதிக கட்டணங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் ஆகியவற்றுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக அந்த அமைச்சு உறுதிப்படுத்தியது.
ஆலோசனை
அட்டைமூலம் பணம் செலுத்தும்போது நுகர்வோர் ஏற்படுத்தும் இழப்புகளை அரசாங்கம் ஈடுசெய்யும் வழிகள் குறித்தும் இந்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டன.
இதேவேளை, எதிர்காலத்தில், அனைத்து பரிவர்த்தனைகளும் படிப்படியாக கைபேசி வழியாக QR குறியீடு அடிப்படையிலான கட்டணங்களுக்கு மாறும் என்று அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 15 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
