முள்ளிவாய்க்காலில் இலங்கைப் படையினரின் செயலை வன்மையாக கண்டிக்கும் கனடா எம்.பி!
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டமை குறித்து கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத்தூபி நேற்று அதிகாலை சேதமாக்கப்பட்டதுடன், நடுகை செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினர்களும் தமது கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கரி ஆனந்தசங்கரி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்த தமிழ் தேசத்திற்கு மே மாதம் துக்கம் மற்றும் பிரதிபலிப்பு நேரமாகும்.
இந்நிலையில், இலங்கை படைகளால் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான நினைவுதூபியை அழிக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்க செயல்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
May is a time of mourning and reflection for the Tamil nation who have suffered innumerable losses at Mullivaikal genocide. The destruction of the memorial & obstruction to memorialize loved ones by #Srilankan forces especially during this time is a reprehensible act. https://t.co/6TYbHTp6vY
— Gary Anandasangaree (@gary_srp) May 13, 2021
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri