கனடாவில் தற்காலிக விசாவில் பணியாற்றும் தமிழர்களுக்கு அதிர்ச்சித் தகவல்
கனடாவில் தற்காலிகமாக பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழில் அமைச்சர் Randy Boissonnault முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்காலிக வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை புதிய விதிமுறைகளை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு தொழிலாளர்
கனடிய தொழிலாளர்களை பணியமர்த்துவதை தவிர்க்க தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை பயன்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.
தற்காலிக குடியிருப்பாளர்கள் கனடிய மக்கள் தொகையில் 6.8 சதவீதமாக உள்ளனர் என அண்மைய மக்கள் தொகை கணக்கெடுப்பு மதிப்பிடுகிறது.
கனடாவில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் அதனை பலர் மோசடியான முறையில் பயன்படுத்துவதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் போட்டியாளருக்கு விருந்து வைத்த சரத்குமார், சர்ப்ரைஸ் போன் கால்.. இந்த வாரம் நடக்கும் விஷயங்கள் Cineulagam

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan
