கனடாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை
கனடாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சீனா மற்றும் ரஸ்யாவினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களை முறியடிப்பது குறித்து இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புலனாய்வு தகவல்கள் பரிமாற்றம் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மிலேனி ஜோலி தென்கொரியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரியா ஓர் நம்பகமான நாடு எனவும் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோலி தெரிவித்துள்ளார்.