கனடாவின் எல்லைப் பாதுகாப்பு: கரி ஆனந்தசங்கரியின் சட்ட மூலம்
கனடாவின் எல்லை பாதுகாப்பு குறித்து கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரி சட்ட மூலமொன்றை தாக்கல் செய்யவுள்ளார்.
இது கனடாவின் எல்லை பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விளக்கும் முக்கியமான சட்ட முன்மொழிவாகும்.
இந்த புதிய சட்ட மூலத்தின் மூலம், கனடா எல்லை சேவைகளுக்கான நிறுவனத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும்.
கனேடிய அரசாங்கத்தின் நடவடிக்கை
சட்டவிரோத பொருட்கள் மற்றும் திருடப்பட்ட கார்கள் கொள்கலன் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றதா என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த கூடுதல் அதிகாரம் வழங்கப்பட உள்ளது.
அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படும் போதை மருந்துகள் மற்றும் சட்டவிரோத பொருட்களை காரணம் காட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனேடிய இறக்குமதிகளுக்கு மேலதிக வரிகளை விதித்திருந்தார்.
இந்நிலையில், அவற்றை கட்டுப்படுத்த கனேடிய அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பதை காட்டும் விதமாக கரி ஆனந்தசங்கரியின் சட்டமூலம் உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |