கனடாவில் தேடப்படும் முக்கிய குற்றவாளி! தகவல் கொடுப்பவர்களுக்கு 1.5 கோடி சன்மானம் அறிவிப்பு
கனடா அரசு வெளியிட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் பட்டியலில், கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோல்டி ப்ரார் என்பவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில், மூளையாக செயல்பட்ட தாதா கோல்டி பிரார் என்ற சதீந்தர் சிங் பிராரை, 'தேடப்படும் முக்கிய - 25 குற்றவாளிகள்' பட்டியலில், கனடா அரசு சேர்த்துள்ளது.
சிறையில் உள்ள தனது நண்பருடன் சேர்ந்து சித்து மூசேவாலாவை, கூலிப்படை உதவியுடன், கோல்டி பிரார் கொலை செய்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கோல்டி பிராருக்கு எதிராக, 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.
BOLO unveiled their new Top 25 Most Wanted list with awareness event at Yonge-Dundas Square.
— Toronto Police (@TorontoPolice) May 1, 2023
Read more:https://t.co/bnX2Qbwh0L pic.twitter.com/hWvgLUjTOv
இந்நிலையில் , INTERPOL-FAST என்ற தப்பியோடியவர்களை கண்டுபிடிக்கும் அணியினர், கோல்டி ப்ராரை பற்றி தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு இந்தியாவிலுள்ள கனேடிய தூதரகத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபர் பற்றிய சரியான தகவல் தருபவர்களுக்கு 1.5 கோடி சன்மானம் என கனடா அரசு அறிவித்துள்ளது.
கோல்ட் ப்ரார் கனடா பொலிஸாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளி என்பதால், இந்திய பொலிஸார் இவர் தொடர்பில் தீவிர விசாரணையை தொடர வேண்டுமெனவும் இந்தியாவிலுள்ள கனடா தூதரகம் தெரிவித்துள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
