கனடா செல்ல புதிய மாற்றம் - சர்வதேச மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளை பெரும் முறையை கனடா இலகுவாக்க உள்ளது.
இதற்கமைய, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு இனி மாகாண அல்லது பிராந்திய சான்றளிப்பு கடிதம் தேவையில்லை.
இந்த மாற்றம் செயன்முறையை விரைவுபடுத்துவதோடு காகித வேலைகளையும் குறைக்கின்றது.
இதன்படி, முனைவர் பட்ட மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழக ஏற்பு கடிதம் மற்றும் உயிரியளவியல் (biometrics) சோதனை ஆகியவற்றை சரிபார்த்த பிறகும் இரண்டு வார விரைவான செயலாக்கத்திலிருந்து பயனடையலாம்.
நீண்ட தாமதங்கள் இல்லை
புதிய அமைப்பில் எத்தனை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.
உலகில் எங்கிருந்தும் தகுதியுள்ள எந்த முதுகலை அல்லது முனைவர் பட்ட மாணவரும் இந்த திட்டம் மூலம் பயனடையலாம்.

புதிய முறையை பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்களும் ஒருசேர விண்ணப்பிக்கலாம்.
வாழ்க்கைத் துணைவர்கள் திறந்த வேலை அனுமதிகளைப் பெறலாம். மேலும், குழந்தைகள் கல்வி அனுமதிகள் அல்லது பார்வையாளர் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது நீண்ட தாமதங்கள் இல்லாமல் குடும்பங்கள் ஒன்றாகச் செல்ல அனுமதிக்கிறது.
நிரந்தர குடியிருப்பு
இதற்கு விண்ணப்பிக்க, கடவுச்சீட்டு, பல்கலைக்கழக ஏற்பு கடிதம், நிதிச் சான்று மற்றும் பிற துணை ஆவணங்கள் உட்பட தேவையான அனைத்து ஆவணங்களும் தேவை.
விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் உயிரியளவியல் (biometrics) சோதனை முடிவுகள் 14 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து ஆவணங்களும் முழுமையாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதி செய்வது தாமதங்களை தவிர்க்க உதவுகிறது.
இதேவேளை, பட்டப்படிப்புக்குப் பிறகு, மாணவர்கள் கனடாவில் பணிபுரிய முதுகலை பணி அனுமதிக்கு (PGWP) விண்ணப்பிக்கலாம்.
இந்த அனுபவம் பின்னர் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 10 மணி நேரம் முன்
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam