எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது – மருத்துவர்கள்
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகில இலங்கை வைத்திய உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்பது குறித்து இந்த சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
மருத்துவர்கள் அவசர அழைப்பு மற்றும் சாதாரண பணிகளுக்காக தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
வருடம் முழுவதும் 24 மணித்தியாலங்களும் கடமையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்பது பொருத்தமற்றது எனவும், எரிபொருள் வழங்குவதில் மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
மருத்துவர்கள் தாமதமின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரியுள்ளது.
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri