“ஒமிக்ரோனை சாதாரணமானதல்ல”- கடும் எச்சரிக்கை விடுக்கும் உலக அமைப்பு!
கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு உலகெங்கிலும் உள்ள மக்களைக் கொல்கிறது.
எனவே அதனை சாதாரணமானது என்று நிராகரிக்கப்படக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வலியுறுத்தியுள்ளார்.
"முந்திய மாறுபாடுகளைப் போலவே, Omicron மக்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறது.
அத்துடன் அது மக்களைக் கொல்கிறது என்று அவர் விளக்கினார். அதேநேரம் புதிய மாறுபாட்டின் எண்ணிக்கை, முன்னர் ஆதிக்கம் செலுத்திய டெல்டா மாறுபாட்டை விட வேகமாகப் போட்டியிடுகிறது.
டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரான் குறைவான கடுமைத் தன்மைக்கொண்டது என்று கருதப்பட்டாலும், தடுப்பூசிகளை செலுத்தியவர்களும் இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று டெட்ரோஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் WHO க்கு 9.5 மில்லியன் அளவான புதிய கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன -
இது முந்தைய வாரத்தை விட 71 சதவீதம் அதிகமாகும். பணக்கார நாடுகள் கடந்த ஆண்டு கிடைக்கக்கூடிய தடுப்பூசி அளவைப் பயன்படுத்திய விதமே, புதி மாறுபாடுகளை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கொரோனாவின் இறப்பு மற்றும் அழிவை" முடிவுக்குக் கொண்டுவர, 2022 ஆம் ஆண்டில் தடுப்பூசி அளவை மிகவும் நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளுமாறு உலகை நாடுகளிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒவ்வொரு நாட்டிலும் 70 சதவிகிதம் தடுப்பூசிகள் செலுத்தப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.