அமைதி வழி போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அமைதி வழி போராட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கிளிநொச்சி மாவட்ட காரியாலயத்தில் ஊடக சந்திப்பு ஒன்று மேற்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
செம்மணி புதைகுழி அகழ்வு தொடர்பான
இதன் போது கருத்து தெரிவித்த சங்கத்தின் செயலாளர், நாளை யாழ் மாவட்டத்தின் பேருந்து நிலையத்தின் முன்பாக செம்மணி புதைகுழி அகழ்வு தொடர்பான அமைதி வழி போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு அனைத்து சமூக மட்ட அமைப்புகள், சர்வமத அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த அனைவரையும் எமது போராட்டத்தை பல சேர்க்கும் வகையில் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |