மன்னாரில் அரசிற்கு எதிரான மாபெரும் ஜனநாயக போராட்டத்திற்கு அழைப்பு
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை (7) காலை 9 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அரசிற்கு எதிராக இடம்பெறவுள்ள ஜனநாயக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கி பட்டினிச்சாவை நோக்கி நகர்கின்றது.
குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்,மற்றும் மின்சாரம் இன்றி
பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இச்செயலைக் கண்டித்து
தமிழ்த்க்ஷதேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை
(7) காலை 9 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ள
மாபெரும் கண்டன போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு தமது உணர்வுகளை
வெளிப்படுத்த அணி திரளுமாறு தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர்
வி.எஸ்.சிவகரன் அழைப்பு விடுத்துள்ளார்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
