நாமல் தலைமையில் அமைச்சரவை! விரைவில் காத்திருக்கும் ஆபத்து
நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி நாமல் தலைமையில் புதிய அமைச்சரவை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பணம் 2.5 மில்லியன் டொலர் பணம் காணாமல போனமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையிலேயே கூடிய விரைவில் நாமல் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் ஜே.வி.பி-யுடன் இணைந்து ஊழல் ஒழிப்புக் குழுவை அமைத்து 'திருடர்களைப் பிடிப்போம்' எனக் கூறிக்கொண்டு மத்திய வங்கியை கொள்ளையடித்தது.
இப்போது அவர்களே மீண்டும் அரசாங்கத்திற்கு வந்து தாங்கள் திருடர்களைப் பிடிப்பதாகக் கூறிக்கொண்டு நிதி அமைச்சின் பணத்தையும் தமது கணக்குகளுக்கு மாற்றும் நிலைக்கு வந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி....