இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு! விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு
‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் (10 மற்றும் 11ஆம் திகதி) ஆகிய நாட்களில் நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 11 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு வேறொரு தினத்துக்கும், புதிய நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்ட விவாதத்தை 12ஆம் திகதி பி.ப 7.30 மணிவரை நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (09.05.2023) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் தீர்மானம்
எதிர்வரும் வியாழக்கிழமை (11.05.2023) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்குப் பதிலாக ‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை இரண்டாவது தினத்திலும் முன்னெடுப்பதற்கு இன்றையதினம் (09.05.2023) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் பி.ப 6.00 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணி முதல் பி.ப. 7.30 மணி வரை நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் 2328/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட, ‘அஷ்வசும’ நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிகம் ட்ரோல் செய்யப்படும் தக் லைப்.. ஆனாலும் மணிரத்னம் உடன் இணைய காத்திருக்கும் முன்னணி ஹீரோ Cineulagam

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
