புதிய முதலீட்டு பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைச்சரவை இணக்கம்
தனியார் சொத்துக்களை தன்னிச்சையாக தேசிய மயமாக்குவதைத் தடுக்கவும், முதலீட்டாளர்களுக்கு கொள்கை ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்ட புதிய முதலீட்டு பாதுகாப்புச் சட்டத்தின் வரைவுக்கு அமைச்சரவை இணக்கம் அளித்துள்ளது.
ஆரம்பத்தில் 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, தனியார் நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கவும், சர்ச்சைகளைத் தீர்க்க முதலீட்டு பாதுகாப்பு வாரியத்தை நிறுவவும், அதிக சட்ட மற்றும் ஒழுங்குமுறை முன்கணிப்பு மூலம் முதலீட்டாளர் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்
இந்த திட்டம் தொடர்பில் கருத்துருவைத் தயாரிக்க அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.

அது இப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், நிதி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிந்தபடி, யோசனை வரைவதைத் தொடங்க அமைச்சரவை சட்ட வரைவாளருக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri