புதிய முதலீட்டு பாதுகாப்புச் சட்டத்திற்கு அமைச்சரவை இணக்கம்
தனியார் சொத்துக்களை தன்னிச்சையாக தேசிய மயமாக்குவதைத் தடுக்கவும், முதலீட்டாளர்களுக்கு கொள்கை ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்ட புதிய முதலீட்டு பாதுகாப்புச் சட்டத்தின் வரைவுக்கு அமைச்சரவை இணக்கம் அளித்துள்ளது.
ஆரம்பத்தில் 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, தனியார் நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்கவும், சர்ச்சைகளைத் தீர்க்க முதலீட்டு பாதுகாப்பு வாரியத்தை நிறுவவும், அதிக சட்ட மற்றும் ஒழுங்குமுறை முன்கணிப்பு மூலம் முதலீட்டாளர் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்
இந்த திட்டம் தொடர்பில் கருத்துருவைத் தயாரிக்க அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.

அது இப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், நிதி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிந்தபடி, யோசனை வரைவதைத் தொடங்க அமைச்சரவை சட்ட வரைவாளருக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri