கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவ அமைச்சரவை ஒப்புதல்

Ajith
in ஆரோக்கியம்Report this article
கொள்கலன்களைப் பயன்படுத்தி 500 வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை நிறுவுவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்களை நாடளாவிய ரீதியில் அமைப்பதற்காக 625 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான திட்டத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.
இளைஞர்களிடையே சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் விளையாட்டுத் துறையில் முன்னேற்றத்திற்கு ஒரு ஊக்கியாக வழங்குவதற்கும் வெளிப்புற உடற்பயிற்சிக் கூடங்கள் நிறுவப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டிருந்தது.
இந்த திட்டம், ஒவ்வொரு ஆண்டும் 100,000 பொதுமக்களுக்கும் 5000 விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும்.
உள்ளூர் மட்டத்தில் உள்ள இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு உடற்பயிற்சி கூடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது..
இதேவேளை உத்தேச திட்டம் 2021 - 2022 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 13 மணி நேரம் முன்

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
