பொலிஸ் அதிகாரிகளுக்கு மின்சார வாகனங்கள்! அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதல்
பொலிஸ் அதிகாரிகளுக்கு மின்சார வாகனங்கள் மற்றும் மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வரையிலான பொலிஸ் அதிகாரிகளுக்கு 400 மின்சார கார்களை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
86 மில்லியன் நிதி ஒதுக்கீடு
இந்த வாகனங்கள் ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து குத்தகை அடிப்படையில் பெறப்பட உள்ளன. இதற்காக ரூ. 86 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பொலிஸ் முதல் பொலிஸ் ஆய்வாளர் வரையிலான பொலிஸ் அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள்கள் சுங்க வரி இல்லாமல் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.
மேலும், அதிகாரிகள் மின்சார மோட்டார் சைக்கிள்களை வாங்குவதற்கு ஏதுவாக, நிதி மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.